Monday, 23 October 2017

நவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம்

நவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம் தேவிபட்டிணம்.
ஸ்ரீராமர் இலங்கையில் நடைபெற்ற போரில் இராவணனை சம்காரம் செய்த பின்பு,தம்மேல் இருக்கும் பிரேத சாபத்தை நீக்கும் பொருட்டு உருவான ஸ்தலமே தேவிபட்டணம்.

நாம் அறிந்தோ அறியாமலே இவ்வகை தோசம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
சிலருக்கு முன் ஜென்ம வினையினாலும் இத்தகையதோசம் ஏற்படுகிறது.
இவ்வகை முன்வினை முடுச்சுகளை அவிழ்ப்பதே தேவிப் பட்டணத்தின் சிறப்பாகும்.
எந்த வகை துன்பம் வருமென்று சொல்லமுடியாது.ஆனால் தேவிப்பட்டணம் சென்று வந்தால் துன்பம் ஓடிவிடும்.

             லக்னாதிபதி +  மாந்தி 
லக்னேசனோடு மாந்தி சேர்ந்து நின்றாலும், சனியுடன் மாந்தி கூடி நினறாலும் இவ்வகை தோசம் உண்டாகும்.

இவற்றை போக்குவதற்கு தேவிபட்டணம் வழிபாடு மிகச்சிறந்த மார்க்கமாகும்.

வழிபடும் முறை :
நவக்கிரகங்களுக்கு உரிய தானியங்களை
சூரியன்
கோதுமை
சந்திரன்
நெல்
செவ்வாய்
துவரை
புதன்
பச்சைபயறு
குரு
கடலை
சுக்கிரன்
மொச்சை
சனி
எள்ளு
ராகு
உளுந்து
கேது
கொள்ளு
இவைகளை ஒரே புது துணியில் கட்டிக்கொள்ளவும்.

தினமும் உறங்குவதற்கு முன் நவக்கிரகங்களை வணங்கிய
பின் தன் தலைலைக்குகீழ் வைத்துக்கொண்டு  உறங்கவும்.

இதேமாதிரி 9 தினங்கள் தொடர்ந்து செய்து வரவும்.
10வது நாள் தேவிப்பட்டணத்திற்கு சென்று
குறைந்தது 9 முறை நவபாசன நவகிரகங்களை ஓம் நவக்கிரகாய   நமக என்று சொல்லிக்கொண்டே  ஒன்பதுமுறை சுற்றி வர வேண்டும்.

கடல் நீரில் ஒன்பது நவக்கிரகங்களும்  ஒன்பது பாசான லிங்கங்களாக காட்சியளிக்கும்.
 
உங்களுக்கு யோகமான காலம் வரத்துவங்கும். 

ஓம் நவக்கிரகாய  நமக

ஓம் நவக்கிரகாய  நமக
--- 

ஜெய்முனி M. ஜோதிவேல்     

              9150080580, 
 9626941494

(இரவு 8 மணி முதல் 10 மணி வரை )






Saturday, 14 October 2017

ஜென்ம நட்சத்திரம் அறிய

ஜென்ம நட்சத்திரம் அறிய

உங்களை சந்திக்கும் நண்பரின் நட்சத்திரம் அறியும் வழி
1.சந்திக்கும் போது சந்திரன் இருக்கும் ராசியை கணக்கிட வேண்டும்.

2.சந்திரனுக்கு 7ல் இருக்கும் கிரகத்தை கணக்கிட வேண்டும்

3.சந்திரனுக்கு 6,12 ல் உள்ள கிரகங்களை கணக்கிட வேண்டும்.
 
 4.அப்போதய ஓரை நாதனை கணக்கிட வேண்டும்.

இந்த நான்கு விதிகளிலும் பொருந்தி வரும் கிரகத்தின் நட்சத்திரமே வந்தவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

உதாரணமாக
சந்திரன் ரிசிபத்தில் இருப்பதாக கொண்டால் வந்தவரின்

 ஜென்ம நட்சத்திரம் அறிவது எப்படி என்று பார்ப்போம்.

சந்திரனுக்கு ஏழில் சனி இருக்கிறார்.

சனியின் நட்சத்திரம் வர வேண்டும்

அதாவது விருசகத்தில் இருக்கும் அனுசம் ஜாதகரின் நட்சத்திரம் என்று அறியலாம்

இதற்கு துணையாக நாம்  ஓரை யை துணையாக எடுக்கலாம்

நன்றி

Saturday, 30 January 2016

அதிஸ்டம் தரும் தெய்வங்கள்



01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி 
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 

03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 

04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 

05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 

06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் 

07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 

08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 

09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 

10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 

11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 

12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி 

13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி 

14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 

15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 

16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான். 

17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர். 

18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 

19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் 

20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 

21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான். 

22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) 

23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்) 

24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) 

25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) 

26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) 

27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன். 

Saturday, 31 October 2015

குண்டாக உடல் இருப்பது ஏன்?



இலக்னாதிபதி கடகம்,மகரம்,மீனம் போன்ற நீர் இராசிகளில் இருப்பது.
இலக்னாமாக மேசம்,கடகம்,சிம்மம்,விருச்சகம்,தனுசு,மீனம் அமைவது.
இலக்னாதிபதி மேலே கண்ட வீடுகளின் அதிபதிகளான சூரியன், சந்திரன், செவ்வாய் குரு ஆகியோர்களின் வீடுகளைப்பார்ப்பது.
சூரியன்,சந்திரன், செவ்வாய்,குரு இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது.
சூரியன் மேலேகண்ட வீடுகளில் இருப்பதாலும் உடல் குண்டாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
உடல்குண்டாக உள்ளவர்களின் ஜாதகங்களில் மேலே கண்ட விதி இருக்கும.
திருமுருக கிருபானந்த வாரியாரின் ஜாதகத்தை ஆய்வு செய்வோம்
கடக லக்னம். லகனத்தில் செவ்வாய்
லகனேசன் சந்திரன் செவ்வாயின் வீடான மேசத்தை பார்க்கிறது.
குரு சந்திரனையும்,தனுசு வீட்டையும் பார்க்கிறது
சூரியன் சிம்மத்தில் ஆட்சியாய் உள்ளது.
சூரியனை வக்ர சனி பார்ப்பதால் முதிய தோற்றம் தருகிறது.
ஜோதிடர் ஜோதிவேல்
91500 80580, 93444 10710.
தொலைபேசியில் இரவு 8 மணிக்குமேல் பேசவும‍

Tuesday, 6 October 2015

கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்குவதற்கு



 குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமைகளில்  காலை 10.30 முதல் 12.00 வரைக்குள்  இராகு காலத்தில் செல்லவும்.
நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு , அதில் நெய் தீபம் ஏற்றி  வழிபட வேண்டும்
அவ்வாறு தொடர்ந்து 20 வாரங்கள் சுக்கிரனை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் ,  குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறையும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள்  காணாமல் போகும்.சந்தோசம் பொங்கும்.
                                                     
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்துநெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம். மிதுன லக்னம் லக்னத்தில் குரு .11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் . சூரியன் ,புதன்,   சனி பகவ...